உன்னாவ் வன்கொடுமை: குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

உன்னாவ் வன்கொடுமை: குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
உன்னாவ் வன்கொடுமை: குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குல்தீப்சிங் செங்கார் மீதான தண்டனை விவரத்தை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.

உன்னாவ் பெண்ணை கடத்தி எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து போராடி வந்தார்.

இந்நிலையில் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com