புதுச்சேரி பல்கலை: காலியாக உள்ள பதிவாளர் பணியை நவம்பருக்குள் நிரப்ப நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி பல்கலை: காலியாக உள்ள பதிவாளர் பணியை நவம்பருக்குள் நிரப்ப நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி பல்கலை: காலியாக உள்ள பதிவாளர் பணியை நவம்பருக்குள் நிரப்ப நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர் இறுதிக்குள் நிரப்ப பல்கலைக் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளதாகவும், தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலி பதவிகள் எப்போது நிரப்படும் என்பது குறித்து பதில் அளிக்க பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு 23 பேரும், பதிவாளர் பதவிக்கு 36 பேரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், நேர்முக தேர்வு நடத்தி நியமனம் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம் தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரு பதவிகளும் முக்கியமான பதவிகள் என்பதால் நவம்பர் இறுதிக்குள் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com