யாஸ் புயல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

யாஸ் புயல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

யாஸ் புயல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
Published on

யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு செல்வதில் பாதிப்பு நேரிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அம்மாநில முதல்வர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் அமித் ஷா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது புயல் மழையின்போது கொரோனா தடுப்புப் பணிகளில் பாதிப்பு நேரிடாமல் பார்த்துக் கொள்ள அவர் அறிவுறுத்தினார். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பை உறுதி செய்யவும், புயலின் போது அங்கு தடையற்ற மின்சார வினியோகம், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினார்களா என்பது உள்ளிட்டவற்றை உறுதி செய்திடவும் அமித்ஷா வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com