\
கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசி கால இடைவெளியை நீட்டிக்க கடிதம்

கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசி கால இடைவெளியை நீட்டிக்க கடிதம்

கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசி கால இடைவெளியை நீட்டிக்க கடிதம்
Published on

கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை 4 வாரத்தில் இருந்து 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளிடையே கால அவகாசத்தை நீட்டிப்பதால் கூடுதல் பலன் அளிப்பதாக மத்திய அரசு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது.

ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வாரங்களில் போட பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 4 வார இடைவெளியில் போடப்பட்டு வந்தது. தற்போது இந்த அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கால அவகாச நீட்டிப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com