விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். இச்சசூழலில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. அதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.