மக்களின் எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிட கழுதை..!

மக்களின் எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிட கழுதை..!
மக்களின் எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிட கழுதை..!

கிளி ஜோதிடம் பற்றி நமக்கு தெரியும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் ஒருவர் கழுதையை வைத்து ஜோதிடம் கூறும் வேடிக்கையான நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

வட்ட வடிவிலான கூடாரத்திற்குள் ஒரு வளையம் அமைத்து அதன் உள்பகுதியில் கழுதையை சுற்றி வரச் செய்கிறார் அதன் உரிமையாளர் கலீல் அகமது கான். வளையத்தின் வெளிப்பகுதியில் சிறுவர்களும் பொது மக்களும் நிற்கின்றனர். அப்போது இங்கு நிற்பவர்களில் யார் டாக்டர் ஆவார். யார் என்ஜினியர் ஆவார் என உரிமையாளர் கேட்டால் கழுதை சிலரின் முன் மட்டும் நிற்கிறது.

இதையடுத்து தங்கள் எதிர்காலத்தை கழுதை கணித்துள்ளதாக கருதி சம்மந்தப்பட்ட நபர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த வேடிக்கை ஜோதிட நிகழ்ச்சியை கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக கலீல் அகமது கான் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com