சபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்
Published on

சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சென்ற 2 பெண்கள் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் மன உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி போராட்டங்கள் நடந்தன. சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பக்தர்கள், ஆண் பக்தர்களாலும், போராட்டக்காரர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.

 இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் முதல்முறையாக தரிசனம் செய்தனர். இவர்கள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு, உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, கண்ணூரைச் சேர்த ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா என்ற இரண்டு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தனர். 50 வயதுக்கு கீழ் உள்ள அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டனர். ஏராளமான அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் அந்தப் பெண்களை தடுத்து நிறுத்தி, நிலக்கல் கன்ட்ரோல் ரூமுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்களை எச்சரித்து பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com