ஐதராபாத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயிவே ஸ்டேஷன் அருகே இன்று காலை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் புறநகர் ரயிலும் ஒரே பாதையில் எதிர் எதிரே வந்தன. திடீரென இந்த ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் புறநகர் ரயிலில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'2 வது பிளாட்பாரத்தில் ஏற்கனவே ஒரு ரயில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த பாதையில் மற்றொரு ரயில் செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் புறநகர் ரயிலின் என்ஜின் சேதமடைந்தது. அதன் டிரைவர் சேகர் படுகாயமடைந்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.