ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2  விமானிகள் பலி

இந்திய ராணுவத்தின் சீத்தா(Cheetah) ஹெலிகாப்டர் பூடானில் விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்திய ராணுவத்தின் சீத்தா ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தின் கிர்மூவிலிருந்து பூடானின் யோங்க்ஃபூல்லா பகுதிக்கு சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சரியாக மதியம் ஒரு மணியளவில் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. பூடானில் மிகவும் மோசமான வானிலை நிலவியதால் இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது. 

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்திய விமானி மற்றொருவர் பூடான் நாட்டை சேர்ந்த விமானி. பூடான் நாட்டை சேர்ந்த விமானி இந்திய ராணுவத்தில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த விபத்து தொடர்பாக இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த்,“இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் மதியம் 1 மணிக்கு பூடானில் விபத்திற்கு உள்ளானது. இந்த விமானம் அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து பூடானிற்கு பயணித்தது” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com