கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 மல்யுத்த வீரர்கள் கைது

கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 மல்யுத்த வீரர்கள் கைது
கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 மல்யுத்த வீரர்கள் கைது

டெல்லியில், இளம் கபடி வீராங்கனை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில், மேலும் 2 மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேசிய அளவிலான இளம் கபடி வீராங்கனை ஒருவர் டெல்லி போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், கடந்த 9 ஆம் தேதி தனது பயிற்சியாளர் தன்னை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று சிலருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று மல்யுத்த வீரர் ஒருவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்தனர். இருவரும் மல்யுத்த வீரர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்‍கில் இதுவரை 3 மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com