விதிகளை மீறியதாகக்கூறி கங்கனா ரனாவத்தின் ட்வீட்டுகளை நீக்கிய ட்விட்டர்!

விதிகளை மீறியதாகக்கூறி கங்கனா ரனாவத்தின் ட்வீட்டுகளை நீக்கிய ட்விட்டர்!
விதிகளை மீறியதாகக்கூறி கங்கனா ரனாவத்தின் ட்வீட்டுகளை நீக்கிய ட்விட்டர்!

ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதாகக்கூறி கங்கனா ரனாவத்தின் சில ட்வீட்டுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு உலக பிரபலங்கள் பலரும் கடந்த சில நாட்களாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலரை குறிப்பாக பாப் பாடகி ரியானாவை முட்டாள் எனக் கூறியதுடன், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை இந்தியாவை பிரிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு பாலிவுட் நடிகை கங்கனா ட்வீட் செய்திருந்தார்.

இதுபோன்ற ட்வீட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் கங்கனாவின் 2 ட்வீட்களை கடந்த 2 மணிநேரங்களில் நீக்கிய அந்நிறுவனம், ’’எங்களுடைய விதிமுறைகளை மீறியதால் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்று கூறியுள்ளது.

மேலும் சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க்கை எலி என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவையும் புதன்கிழமை கடுமையாக விமர்சித்திருந்தார். இது ட்விட்டர் நிறுவனத்தால் தற்போது நீக்கப்பட்ட ட்வீட்டுகளில் ஒன்று.

இதற்குமுன்பே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கமெண்டுகளால் கங்கனாவின் ட்விட்டர் கணக்கு இடைக்காலமாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com