குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை

குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை
குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை

புதுச்சேரியில் குடும்பத் தகராறு காரணமாக மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி அரியாங்குப்பம் வீராம்பட்டிணம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55) அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் இவருக்கு, இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி கடலூரிலும் இரண்டாவது மனைவி அவருடனும் வசித்து வந்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவி என்பதால் அடிக்கடி குடும்பச் சண்டை இருந்ததாகக் கூறப்படுகிறது, இந்நிலையில் நேற்றிரவு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது இரண்டாவது மனைவியின் மகன் தினேஷ் ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுறீங்க என்று கேட்டு மார்பில் அடித்துள்ளார்,

இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் தினேஷின் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார், இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தினேஷ் அங்கேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தினஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com