உத்தரபிரதேச மாநிலத்தில் மார்க்கெட் பகுதியில் மூன்று இளைஞர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தால் வியாபாரிகள் அச்சமடைந்தனர்.
மொராதாபாத் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் நடுசாலையில் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த வியாபாரிகளுக்கு அவர்கள் மிட்டல் விடுத்து தப்பிச்சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.