மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 26 ஆம் தேதி திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் இந்திய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதை விவசாயிகள் ஏற்க மறுத்ததோடு வரும் 26 ஆம் தேதி திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் எனவும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.