காஷ்மீரில் குளிர்காலம் - குவியும் சுற்றுலாப் பயணிகள்

காஷ்மீரில் குளிர்காலம் - குவியும் சுற்றுலாப் பயணிகள்
காஷ்மீரில் குளிர்காலம் - குவியும் சுற்றுலாப் பயணிகள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்துவதற்காக படகு வீடுகள் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதால் அவர்களுக்காக படகு வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு வரவேற்க தயாராக உள்ளன. காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் நேற்று மைனஸ் 7 டிகிரி குளிர் பதிவானது. இதற்கிடையே உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலை பனி சூழ்ந்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com