கொரோனா இரண்டாம் அலை காரணமாக கேரளாவில் மே 8-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களாக நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக கேரளா உள்ளது. இச்சூழலில், கேரளாவில் சுற்றுலாத் தலங்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்கு வணிக வளாகங்களும் திறக்கப்படுகிறது.