டாப் செய்திகள்: விவசாயிகள் போராட்டம் முதல் தைப்பூச திருவிழா வரை!

டாப் செய்திகள்: விவசாயிகள் போராட்டம் முதல் தைப்பூச திருவிழா வரை!
டாப் செய்திகள்: விவசாயிகள் போராட்டம் முதல் தைப்பூச திருவிழா வரை!

இன்றைய டாப் செய்திகளில் சில...

  • விவசாயிகள் வெளியேறாவிட்டால் அகப்பற்படுவர் என உத்தரப் பிரேதச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காசிப்பூர் எல்லையில் காவல்துறை குவிக்கப்பட்டதால் விடியவிடிய பதற்றம் நீடித்துவருகிறது.
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் அறிவித்துள்ளது.
  • தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது. அதில் இடைக்கால பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையை இன்று தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ என்று புதிய வியூகத்தில் இன்று முதல் பரப்புரையை தொடங்குவதாக தெரிவித்திருக்கிறார் முக ஸ்டாலின். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நேரில் மரியாதை செலுத்திய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • நீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானை மீது தீயிட்ட டயரை வீசிக் கொன்ற விவகாரத்தில் 55 சொகுசு விடுதிகள் காலவரம்பின்றி மூடப்பட்டுள்ளது.
  • புத்துணர்வு முகாமுக்கு வரும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
  • கல்விக் கட்டணம் அதிகமாக உள்ளதாக மாணவர்கள் போராடி வரும் நிலையில், நடவடிக்கையாக உயர்கல்வித் துறையின் கீழ் இருந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத் துறையின்கீழ் மாற்றப்பட்டுள்ளது.
  • தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் வண்ணமயமாக நடைபெற்ற தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com