மேற்கு வங்கத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல்: கடும் போட்டி

மேற்கு வங்கத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல்: கடும் போட்டி

மேற்கு வங்கத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல்: கடும் போட்டி
Published on

மேற்கு வங்காளத்தில் நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையே 4 முனை போட்டி நடைபெறுகிறது. தேர்தலின் போது கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

20 மாவட்ட பஞ்சாயத்துகள் உட்பட 48 ஆயிரத்து 650 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மே 17ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வரும் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com