இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று பொருளாதாரத்திற்கன நோபலுக்கு தேர்வு செய்யப்பட்ட அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்த தனது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை என சீமான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

திமுக போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

நிலுவையில் உள்ள வாடகையை வழங்கக்கோரி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான கணேசனுக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை சிறை.

பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி  போட்டியின்றி தேர்வாக உள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com