தலைப்புச் செய்திகள்| சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை To தமிழ்நாட்டில் வெளுத்துவாங்கிய கனமழை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை முதல் வெளுத்து வாங்கிய கனமழை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம். மேலும், காவிரி உரிமையை அனைத்து விதத்திலும் தமிழக அரசு நிலைநாட்டும் என அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.

  • டெல்லியில் இன்று கூடுகிற காவிரி மேலாண்மை ஆணையத்தில், சிலந்தி ஆற்றில் தடுப்பணை, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தமிழ்நாடு அரசு திட்டம்.

  • தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.

  • தமிழ்நாட்டின் பல இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி.

  • திருநள்ளாறு கோயிலில் பிரமோற்சவ விழா கோலாகலம்.இந்நிலையில், தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை தரிசித்த பக்தர்கள்.

  • 5-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 60 புள்ளி பூஜ்ஜியம் ஒன்பது விழுக்காடு வாக்குப்பதிவு என இந்திய தேர்தல் ஆணையம் தகவல்.

  • புரி ஜெகநாதர் கோயில் சாவி 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது என தேர்தல் பரப்புரையில் வி.கே. பாண்டியனை மறைமுகமாக தாக்கினார் பிரதமர் மோடி.

  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல்.இந்நிலையில், இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்.

  • ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்?. முதல் குவாலிஃபயர் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com