இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

தலைப்புச் செய்திகள் | ஒரே பயணச்சீட்டு நடைமுறை முதல் பிரதமர் மோடியின் வேட்பு மனு தாக்கல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஒரே பயணச்சீட்டு நடைமுறை முதல் பிரதமர் மோடியின் வேட்பு மனு தாக்கல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
  • வாரணாசியில் போட்டியிட கங்கையை வழிபட்ட பின் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ரூபாய் 3 கோடியே 2 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தகவல.

  • அமேதி மற்றும் ராய்பரேலி தொகுதிகளோடு உணர்வுபூர்வமான தொடர்புகளை கொண்டுள்ளோம் என காணொளி வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடிFile image
  • திருப்பதியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதில், வாகனங்களுக்கு தீ வைக்காப்பட்டதால், இதனை தடுத்து நிறுத்த காவல்துறை தடியடி நடத்தியது.

  • திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்தடை ஏற்பட்டதால், சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததால் கட்சியினர் அதிர்ச்சி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கோடை மழை. மேலும் நான்கு நாள்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வசதி டிசம்பரில் நடைமுறைக்கு வரும் என சென்னை போக்குவரத்துக் குழும அதிகாரிகள் தகவல்.

  • மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரு பெண் உள்பட 4பேர் உயிரிழப்பு.

  • ரஃபாவில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறினர்.மேலும் இங்கு இஸ்ரேல் நடத்தியதாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

  • ஐபிஎல் தொடரில் லக்னோவை வீழ்த்தியது டெல்லி அணி. இதன்மூலம், புள்ளிகள் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

  • உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் மற்றும் காபி அருந்துவது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் என ஐ.சி.எம்.ஆர். எச்சரித்துள்ளது.

  • மோட்டார் வாகனங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள் செய்வது சட்டப்படி குற்றம் என அரசு எச்சரித்துள்ளது.

  • புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப் பாட வகுப்புகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com