காலை தலைப்புச் செய்திகள்|புதுச்சேரியில் சிறுமி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் to மகளிர் RCB தோல்வி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது புதுச்சேரியில் சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம் முதல் மகளிர் பிரீமியர் லீக் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • புதுச்சேரி சிறுமி கொலையில் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்த நிலையில்,காவல்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

  • புதுச்சேரி சிறுமிக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளநிலையில், சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

  • நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது ஏன்? என புதுச்சேரி சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • மக்களிடம் நேரடியாக நிதி வழங்குவதாக அப்பட்டமான பொய் கூறுகிறார் பிரதமர் மோடி என்றும் மாநில அரசின் நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக விருப்ப மனு வழங்குவதற்கு இன்றே கடைசி நாள். இந்நிலையில், இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  • நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என இபிஎஸ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் நலமாக இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலளித்துள்ளார்.

  • அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்தது தேமுதிக. மேலும் எதிர்காலத்தில் வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று தேமுதிக கருத்து தெரிவித்துள்ளது.

  • மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி முடிவு செய்துள்ளது. மோடியை மீண்டும் பிரதமராக்க இணைந்து செயல்பட முடிவு என சரத்குமார் அறிவித்துள்ளார்.

  • டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களுடன் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக தலைவர்கள் நள்ளிரவில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், தமிழ்நாடு வேட்பாளர் பட்டியலை தயார் செய்வது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

  • கட்சிப் பணிகளை வேகப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகம், செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கவுள்ளது.

  • மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் 5 பேர் போட்டியிடவுள்ளனர். மேலும், ஆரணி தொகுதிக்கு பதில் தாம் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக மன்சூர் அலிகான் அறிவித்துள்ளனர்.

  • 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை வழங்கி தமிழக அரசு கவுரவித்த நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக திரைக்கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதமிடம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • சந்தேஷ்காளி விவகாரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களும் கொந்தளித்துள்ளனர்.ஆகவே பெண்கள் சக்தியால் திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தப்படும் என மேற்குவங்க பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியுள்ளார்.

  • மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் மும்முரம் காட்டிவருகிறது.இந்நிலையில், 50 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை ப.சிதம்பரம் தலைமயிலான குழுவானது கார்கேவிடம் வழங்கியது.

  • கேரளா பத்தனம்திட்டாவில் காட்டுப் பன்றிக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண்னை 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

  • ஹரியானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேட்டில் குடும்பத்தினரே மாணவர்கள் காப்பி அடிக்க உதவியுள்ளனர்.

  • ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் ரஷ்ய ராணுவத்தில் இருந்து போர் முனைக்கு அனுப்பப்பட்ட இந்திய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

  • அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹாலே விலகிய நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் வாய்ப்பை பெறுவாரா டொனால்டு டிரம்ப்? என கேள்வி எழுந்துள்ளது.

  • இலங்கை கொழும்புவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை மேற்கொண்டனர். இந்நிலையில், கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சி மாணவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்..

  • மெக்சிகோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாணவர்களுக்கு நீதி கேட்டு அதிபர் மாளிகையின் கதவை உடைத்து போராட்டக்காரர்கள் ஆவேச போராட்டம் நடத்திவருகின்றனர்.

  • தர்மசாலா மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றனர்.இப்போட்டியில், 100ஆவது டெஸ்டில் களமிறங்குகிறார் இந்தியாவின் அஷ்வின்.மேலும், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவுக்கும் புதிய மைல்கல்லாக அமைகிறது இப்போட்டி.

  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com