காலை தலைப்புச் செய்திகள் | உலக முதலீட்டாளர் மாநாடு முதல் ரஞ்சி கோப்பையில் களமிறங்கிய சிறுவன் வரை!

இன்றைய காலை தலைப்பு செய்திகளை பார்க்கலாம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள், கீழ்க்காணும் விஷயங்களை அலசுகிறது.

  • சென்னையில் நாளை தொடங்குகிறது உலக முதலீட்டாளர் மாநாடு.

  • போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

  • நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

  • கனமழையால் சேதமடைந்த நெல்லை- திருச்செந்தூர் வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை.

  • இன்று நடைபெறுகிறது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.

  • மேட்டுப்பாளையம் அருகே முதலையை பிடிக்க குட்டையில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்.

  • விண்வெளி துறையில் புதிய வரலாறு எழுத தயாரான இந்தியா.

  • தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு எதிர்ப்பு.

  • வங்கதேசத்தில் பயணிகள் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து.

  • ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் களமிறங்கிய 12 வயது சிறுவன்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com