காலை தலைப்புச் செய்திகள்|சாதிவாரி கணக்கெடுப்பு | கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது சாதிவாரி கணக்கெடுப்பு முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|

  • கடற்கொள்ளையரிடம் சிக்கிக்கொண்ட ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலை மீட்டு,கப்பல் மாலுமிகளாக இருந்த 23 பாகிஸ்தானியர்களை விடுவித்தது இந்திய கடற்படை.

  • வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

  • திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் என தமிழக பாஜக நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

  • சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கைக்கோர்த்த மர்மம் என்ன? .சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு மோடி உறுதி அளித்தாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

  • ஆசைவார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றி அரசு அமைத்துவிட்டது எனவும், திமுக நீட் தேர்வை நீக்க இதுவரை செய்தது என்ன எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • மக்களவைத் தேர்தலை கவுன்சிலர்களுக்கான தேர்தல் என நினைத்து அதிமுக பரப்புரையில் ஈடுபட்டுள்ளது என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

  • கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைச்சர் முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். நாற்காலிகளை தூக்கி வீசியதால் சிதறி ஓடிய கூட்டணி கட்சியினர்.

  • தமிழகத்தில் மீண்டும் இந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், அப்படி இந்தியை திணித்தால் நடப்பதே வேறு என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆவேசம்.

  • ஜிஎஸ்டி காரணமாக கோவையில் ஏராளமான பஞ்சாலைகள், சிறு, குறு ஆலைகள் மூடப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • நெல்லையில் ஒருபுறம் இந்தியில் பேசி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் , மற்றொரு புறம் 4 மொழிகளில் பேசி ஆதரவு திரட்டிய நாகை அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர்.

  • ஆரத்தி பணம் கொடுத்தது தொடர்பான வீடியோ கடந்தாண்டு எடுக்கப்பட்டது என அண்ணாமலை விளக்கம். இந்நிலையில், தவறான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசின் அனுமதியில்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டினால், மாடு முட்டியதில் பார்வையாளராக நின்றிருந்த இளைஞர் உயிரிழந்தார்.

  • ஈரோட்டில் மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார். வீடியோக்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்துவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ரமலான் பண்டிகையையொட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

  • புதுச்சேரியில் சிறை வளாகத்தில் செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றுடன் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டநிலையில், சிறை வளாகத்திற்குள் வீசியது யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

  • சுமார் ஒரு டன் சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டநிலையில், சந்தனமரக்கட்டைகள் கடத்தியதாக புதிய பாரதம் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • காங்கிரஸ் கட்சி 1,823 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

  • பழைய பான் எண்ணை பயன்படுத்தியதால் 11 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் இருவரின் புகைப்படங்கள் வெளியீடப்பட்டுள்ளநிலையில், தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என NIA அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com