Headlines|பள்ளிகளுக்கு விடுமுறை To AI விஜயகாந்த் வரை!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை பாதிப்பு காரணமாக இன்று விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருச்சி, தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
நெல்லையில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி.
தாமிரபரணி ஆற்றில் பேரிரைச்சலுடன் பெருக்கெடுக்கும் வெள்ளம்.
தென்காசியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் செங்கோட்டை - வல்லம் இடையே போக்குவரத்து துண்டிப்பு. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதி.
அருப்புக்கோட்டையில் கனமழையால் குடியிருப்புப் பகுதியில் ஆறுபோல் பாய்ந்தோடிய வெள்ளத்தில், காவல் துறையின் தடுப்பை, படகாக மாற்றிய சிறுவன்.
தஞ்சை பாபநாசத்தில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால், திருவையாறில் 30 ஏக்கர் வாழை, 300 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
திருக்கார்த்திகையை ஒட்டி திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு.
திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசித்த பிறகு சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள். தற்காலிக பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்.
தமிழகம் முழுவதும் கோயில்களில் மகா தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் வழிபாடு. இந்தவகையில். லட்ச தீப ஒளியில் ஜொலித்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
ஹைதாராபாத்தில் ரசிகை உயிரிழந்த வழக்கில் கைதான நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன். சிறையில் இருந்து இன்று வெளியே வருவார் என எதிர்பார்ப்பு.
அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தெலுங்கு நடிகர்கள். ஒருவர் மீதே அனைத்து குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதாக நடிகை ராஷ்மிகா மந்தானா வேதனை.
டொனால்ட் ட்ரம்பின் முடிவால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல். இந்நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான முதல் கட்ட பட்டியலில் 18 ஆயிரம் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்.
அரசியல் நெருக்கடியால் ஒரே ஆண்டில் 4 பிரதமர்களை கண்ட பிரான்ஸ். இந்நிலையில், புதிய பிரதமராக ஃபிராங்கோயிஸ் பெய்ரூவை நியமித்தார் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படைத்தலைவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு. ஏ.ஐ. மூலம் மீண்டும் திரையில் விஜயகாந்தை கண்டதால் ரசிகர்கள் உற்சாகம்.