இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை வாக்கு எண்ணிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்ற நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று நண்பகலில் விளக்கம் அளிக்கிறது.

  • தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 42 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், கலவரத் தடுப்பு வாகனங்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் I.N.D.I.A. கூட்டணி மனு அளித்துள்ளது.

  • I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன என தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்
  • அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது மீண்டும் பாஜக பெமா முதலமைச்சராகிறார்.

  • சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது எஸ்கேஎம் கட்சி. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி சாதனை.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் INDIA கூட்டணி சார்பில் மனு.. காரணம் என்ன?
  • தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்ததுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஐஸ்லாந்தில் அதிபர் தேர்தலில், 34 வாக்குகள் பெற்று புதிய அதிபரானார் ஹல்லா தோமஸ்.

  • ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் என ஐ.சி.சி.யின் விருதை வென்றுள்ளார் விராட் கோலி.

  • 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொங்கியது. இந்நிலையில், முதல்போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மைதானத்திற்குள் ஓடிவந்த ரசிகர்.. அடித்து துவைத்த அமெரிக்க போலீஸ்... பதறிப்போய் ரோகித் செய்த செயல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com