சுஷ்மாவுடன் மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

சுஷ்மாவுடன் மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு
சுஷ்மாவுடன் மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, தமிழக மீனவப் பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்திக்கின்றனர்.

டெல்லியில், தமிழக மீனவப் பிரதிநிதிகள் 10 பேருடன், சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவை இன்று சந்தித்து பேசவுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கவும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அப்போது அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சுஷ்மா ஸ்வராஜை ச‌ந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதியளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜை மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com