திருப்பதி: கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி: கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி: கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி
Published on

திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.

திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவம் நடந்து முடிந்த நிலையில், தற்போது நவராத்திரி பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. 5-ஆம் நாளான நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். மாலையில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.


மஹாவிஷ்ணுவின் வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். வழக்கமாக கருட சேவை 4 மாட வீதிகளின் வழியாக நடைபெறும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோயிலின் உள்ளேயே ஏகாந்தமாக கருட சேவை நடைபெற்றது.


கருட சேவையில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் வேதபாராயணம் செய்தனர். பிரமோற்சவத்தின் 6-ஆம் நாளான இன்று காலையில் ஹனுமந்த வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com