குடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

குடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

குடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

ஆந்திர மாநிலம் திருப்பதியில், குடிபோதையில் தூக்கு போட்டுக் கொள்வதாக விளையாடிய இளைஞர் ஒருவர் உண்மையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே திருச்சானூரில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவர் வழக்கம்போல் நேற்று பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சிவக்குமார் அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.

இதையடுத்து குடிபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் செய்த சிவக்குமார் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக நாடகமாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் துணி இறுக்கமாக சிக்கி கொண்டது. இதைத்தொடர்ந்து மூச்சு விடமுடியாமல் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர், சிவக்குமாரின் நண்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com