திருப்பதியில் ஒரே ஆண்டில் 10 கோடி லட்டுகள்... ரூ.1000 கோடி காணிக்கை

திருப்பதியில் ஒரே ஆண்டில் 10 கோடி லட்டுகள்... ரூ.1000 கோடி காணிக்கை

திருப்பதியில் ஒரே ஆண்டில் 10 கோடி லட்டுகள்... ரூ.1000 கோடி காணிக்கை
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2016 ஆம் ஆண்டில் உண்டியல் காணிக்கையாக ரூ.1018 கோடி கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 2 கோடியே 66 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும் அவர்கள் மூலமாக ரூ.1018 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு உண்டியல் காணிக்கையை விட 25 சதவீதம் அதிகமாக இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உண்டியல் காணிக்கையை அடுத்து இந்த ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான லட்டு விற்பனையும் அமோகமாக இருந்தது என்றும் சுமார் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் இதற்காக தயார் செய்யப்பட்டதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஒரே ஆண்டில் இவ்வளவு லட்டுகள் தயார் செய்திருப்பது இதுவே முதல்முறை என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com