ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதியில் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு

ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதியில் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு

ஜிஎஸ்டி எதிரொலி: திருப்பதியில் தங்கும் விடுதி கட்டணம் உயர்வு
Published on


ஜிஎஸ்டி வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கும் விடுதிகளின் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இது 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் விடுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்

ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 12% ஜிஎஸ்டியும், 2,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 18% ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது திருப்பதி கோவிலில் 1,500 ரூபாய் கொண்ட அறைக்கு, இனி 1,700 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். 2000 ரூபாய் அறைக்கு இனி 2,200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 2,500 ரூபாய் கட்டண அறைக்கு இனி 3000 ரூபாயும், 3000 ரூபாய் கட்டண அறைக்கு 3,500 ரூபாயும், 3,500 ரூபாய் கட்டண அறைக்கு 4,100 ரூபாயும், 4,000 ரூபாய் கட்டண அறைக்கு 4,700 ரூபாயும், 4,500 ரூபாய் கட்டண அறைக்கு 5,300 ரூபாயும், 6000 ரூபாய் கட்டண அறைக்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திருப்பதி கோயில் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com