ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை - யார் காரணம்?  

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை - யார் காரணம்?  

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை - யார் காரணம்?  
Published on

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் (Jiaganj) பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35). இவர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் தனது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள் மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை தங்களின் வீட்டில் மர்மானமுறையில் இறந்து கிடந்தனர். இந்த மூவரின் உடலையும் கைப்பற்றிய மேற்கு வங்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை அதிகாரி, “பள்ளி ஆசிரியர் போந்து கோபால் பால் தனது குடும்பத்துடன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரின் உடலும் ரத்த வெள்ளத்தில் அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இவர்களை மர்ம நபர்கள் சிலர் திங்கட்கிழமை இரவு கொலை செய்திருக்கிறார்கள். 

இந்தக் குடும்பம் விஜயதசமி கொண்டாட்டத்திற்கு பூஜை பந்தலுக்கு வராததால் அருகிலிருந்த மக்கள் கோபாலின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அவர்களின் வீடு உள்ளே தாழிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் எங்களுக்கு தகவல் அளித்தனர்.” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com