மத்தியப் பிரதேசத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்

மத்தியப் பிரதேசத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்
மத்தியப் பிரதேசத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்

கொரோனா பரவலை தடுக்க மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தூர், போபால் மற்றும் ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவுக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்துமாறு முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளொன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com