திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி!

திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி!
திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி!

திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது

கொரோனா அச்சுறுத்தலால் 60 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்னும் சில மாநிலங்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. தமிழகமும் வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஜூன் 8 முதல் 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com