குடியரசு தலைவர் மாளிகை அருகே குழாய்கள் திருட்டு

குடியரசு தலைவர் மாளிகை அருகே குழாய்கள் திருட்டு
குடியரசு தலைவர் மாளிகை அருகே குழாய்கள் திருட்டு

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோர் பாக் பகுதியில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதற்காக மாளிகையில் 23 மற்றும் 24ஆவது நுழைவு வாயில்களின் வாசல் அருகே குழாய்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் 20 குழாய்கள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணையில் காரில் வந்த சிலர் குழாய்களை திருடி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மூலம் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இந்த குழாய்களை இவர்கள் மீரட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com