"சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வாய்ப்பில்லை" - மத்திய சட்டத்துறை அமைச்சர் பதில்

"சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வாய்ப்பில்லை" - மத்திய சட்டத்துறை அமைச்சர் பதில்

"சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வாய்ப்பில்லை" - மத்திய சட்டத்துறை அமைச்சர் பதில்

உச்சநீதிமன்றத்தின் கிளையை டெல்லிக்கு வெளியே அமைக்க இயலாது என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்குமாறு திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பதிலளித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியுள்ளார். டெல்லிக்கு வெளியே தங்கள் கிளையை அமைப்பதற்கான உரிய காரணங்கள் எதுவும் இல்லை எனக் கோரி அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டே நிராகரித்துவிட்டதாக அமைச்சர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளாளர்.

மேலும் உச்சநீதிமன்றம் தேவையான நேரங்களில் தனது பணிகளை டெல்லி தவிர பிற இடங்களில் குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் மேற்கொள்ள அரசமைப்பு சாசனத்தில் இடம் உள்ளது என்றும் அமைச்சர் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com