புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு

புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு

புதுச்சேரியில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை இன்று முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து வகையான மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள், தோட்டங்கள் திறப்பதற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.

நடை பயணம் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் நூறு பேருக்கு மிகாமலும், இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளில் அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் இரவு 9 மணிக்குப் பின் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com