ஆந்திரா: திருமணத்தை மீறிய உறவை கைவிட சொன்ன தந்தையை கட்டிவைத்து அடித்த மகன்!

ஆந்திரா: திருமணத்தை மீறிய உறவை கைவிட சொன்ன தந்தையை கட்டிவைத்து அடித்த மகன்!
ஆந்திரா: திருமணத்தை மீறிய உறவை கைவிட சொன்ன தந்தையை கட்டிவைத்து அடித்த மகன்!

திருமணத்தை மீறிய உறவை கைவிடச் சொன்ன தந்தையை, காதலி முன்பே கட்டிவைத்து மகனே தாக்கிய சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர், அங்குள்ள பகுதியில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 21 வயதில் பாரத் என்ற மகன் இருக்கிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுள்ள பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. சுமை தூக்கும் தொழிலாளியான பாரத், ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று வந்ததாக கூறி பெற்றோர்கள் வேதனையில் இருந்துள்ளனர். பின்னர் பாரத்தின் தந்தை டெல்லி பாபு, மகனைக் கண்டித்துள்ளார். ஆனாலும், அவரது பேச்சையும் மீறி பாரத், அந்த பெண் உடனான உறவை விடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த டெல்லி பாபு, சித்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் பாரத்தை, காவல் நிலையத்துக்கு அளித்த போலீஸார், திருமணத்தை மீறிய உறவை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தம்மீது தந்தை புகார் அளித்தது பாரத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபத்துடன் வீட்டிற்குச் சென்ற பாரத், அந்தப் பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து அவர் முன்பு, தன் தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளார். மேலும், கட்டையாலும் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் தந்தை டெல்லி பாபுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து டெல்லி பாபுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டெல்லி பாபு சித்தூர் போலீசில் புகார் அளிக்க, அவர்கள் வழக்குப் பதிவு செய்து பாரத்தை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com