குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக ஒலித்த ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்

குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக ஒலித்த ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்
குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக ஒலித்த ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ கோஷம்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் ஒலித்தது.

72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவத்தின் ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்றது.

அப்போது முதன்முறையாக சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் ஒலிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 15ஆம் தேதி ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஏவுகணை பிரிவு வீரர்கள் துர்கா மாதாகி ஜெய், பாரத் மாதாகி ஜெய் ஆகிய கோஷங்களுடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தையும் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com