“நமது தேசத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால்?” - ராகுல் காந்தி

“நமது தேசத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால்?” - ராகுல் காந்தி
“நமது தேசத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால்?” - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “நமது தேசத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால்?” என சீனா - இந்தியா இடையே நிலவும் எல்லை விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 

“நமது தேசத்தில் பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவிற்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய அரசிடம் எந்தவொரு வியூகமும் இல்லை. அதே நேரத்தில் ‘மிஸ்டர் 56’ இன்ச் அச்சப்பட்டுவிட்டார் போலும். இப்படி மனம் போன போக்கில் பொய்களை சொல்லி வரும் அரசை நம்பி, எல்லையில் நம் பாதுகாப்பிற்காக இரவு பகல் பார்க்காமல் பணியை கவனித்து வரும் எல்லை படை வீரர்களை பற்றிய நினைவுகள் தான் எனக்குள் உள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சீனாவுடனான எல்லை விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், முப்படை தலைமை தளபதியும் இரு வேறு கருத்துகள் தொடர்பான செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் ராகுல் காந்தி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com