மியான்மரில் நள்ளிரவு 11.58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் இந்த நிலநடுக்கம் லடாக்கின் லே வரை உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இந்த நிலநடுக்கம் நள்ளிரவு 12.30 மணிக்கு உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.