கோழிக்கோடு அருகே தாமரசேரியில் ஒரு வீட்டில் பவுசியா என்ற இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல பணி முடிந்ததும், அந்த வீட்டின் வாசலுக்கு வந்து பேருந்துக்காக அவர் நின்றபோது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் பவுசியாவை சூழ்ந்து கொண்டு குரைத்தபடி இருந்தன. இதனால், அங்கிருந்து நகராமல் அச்சத்துடன் வெறும் கைகளை காட்டி நாய்களை விரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சாலையை கடக்க அவர் முயன்றபோது, பாய்ந்து வந்த நாய்கள், பவுசியாவை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. அவரது அலறல் சத்தம் கேட்டு, நாயின் உரிமையாளர் ஓடோடி வந்து, பவுசியாவை காப்பாற்ற முயன்றார்.