'இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்' - அல்கொய்தா மிரட்டல்

'இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்' - அல்கொய்தா மிரட்டல்
'இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்' - அல்கொய்தா மிரட்டல்

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்'  செய்து பாஜக உத்தரவிட்டது. எனினும் மத்திய பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில்,  நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக 6-ம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிக்கலாம்: காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைக்கும் புதிய தீவிரவாத அமைப்பு: திடுக்கிடும் தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com