ஜனவரி மழை பாதிப்புகள் குறித்து இன்று முதல் மத்திய குழு ஆய்வு

ஜனவரி மழை பாதிப்புகள் குறித்து இன்று முதல் மத்திய குழு ஆய்வு
ஜனவரி மழை பாதிப்புகள் குறித்து இன்று முதல் மத்திய குழு ஆய்வு

தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர். விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் ஒரு குழுவினரும், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மற்றொரு குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர். 2 நாட்களுக்கு நடைபெறும் ஆய்வுக்கு பின்னர், மாநில அரசின் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். 6ஆம் தேதி டெல்லி திரும்பும் மத்திய குழுவினர், பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com