கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த மருத்துவர்

கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த மருத்துவர்
கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த மருத்துவர்

மகாராஷ்டிராவில் 41 வயதான மருத்துவர் அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் நாக்பூர் பகுதியை சேர்ந்த சுஷ்மா ரானே என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

‘கடந்த திங்கள் இரவு மருத்துவர் சுஷ்மா அவரது கணவர் தீரஜ், 11 மற்றும் 5 வயதான இரண்டு குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனால் அவர்கள் மூவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற நிலையில் விஷ ஊசி போட்டு கணவர் மற்றும் குழந்தைகளை கொன்ற மருத்துவர் அதே அறையிலிருந்த சீலிங் ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்’ என போலீசார் தெரிவித்துள்ளனர். 

நேற்று காலை அவர்களது படுக்கையறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்  போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவரின் அறையிலிருந்து இரண்டு ஊசி மற்றும் தற்கொலை கடிதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர். அதில் எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என சுஷ்மா எழுதி வைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com