“நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூடச் சீனா கைப்பற்றவில்லை” - பிரதமர் மோடி உரை 

 “நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூடச் சீனா கைப்பற்றவில்லை” - பிரதமர் மோடி உரை 
 “நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூடச் சீனா கைப்பற்றவில்லை” - பிரதமர் மோடி உரை 
 
 
இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் நாட்டில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை என்று கூறியுள்ளார்.
 
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
 
 
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, தற்போது பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 
 
இந்நிலையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்,  “ஒரு அங்குலத்தைக்கூடச் சீனா கைப்பற்றவில்லை” என்ற பிரதமர் தொடர்ந்து சில விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். “இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவவில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை  நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது. நமது ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை உள்ளது.   முழு நாடும் அவர்களுடன் இருப்பதாக எங்கள் வீரர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். எல்லைப் பகுதியில் புதியதாகப் பல கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com