காவிரி நதிநீர் மேலாண் ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதம் - கர்நாடக முதல்வர் தகவல்

காவிரி நதிநீர் மேலாண் ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதம் - கர்நாடக முதல்வர் தகவல்
காவிரி நதிநீர் மேலாண் ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதம் - கர்நாடக முதல்வர் தகவல்
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் குறித்து அடுத்து வரும் காவிரி நதி நீர் மேலாண் ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர், மேகதாதுவில் அணை கட்ட விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியதாக தெரிவித்தார். அடுத்து நடைபெறும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசப்படும் என மத்திய அமைச்சர் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ஓர் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இத்திட்டம் அவசியம் என கர்நாடகா கூறி வருகிறது. ஆனால் இத்திட்டத்தால் தங்களுக்கு கிடைக்க கூடிய காவிரி நீரின் அளவு மேலும் குறையும் என்றும் இதனால் டெல்டா மாவட்ட விவசாயம் கேள்விக்குறியாகும் என்றும் கூறி தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com