பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக் கேட்கப்பட்டதாக யாரும் புகாரளிக்கவில்லையே?- உச்சநீதிமன்றம் கேள்வி

பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக் கேட்கப்பட்டதாக யாரும் புகாரளிக்கவில்லையே?- உச்சநீதிமன்றம் கேள்வி

பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக் கேட்கப்பட்டதாக யாரும் புகாரளிக்கவில்லையே?- உச்சநீதிமன்றம் கேள்வி
Published on
உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை என தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது தலைமை நீதிபதி, உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை என்றும் 2019-ஆம் ஆண்டிலேயே இந்த விவகாரம் வெளிவந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவசரமாக கையாள வேண்டிய சூழல் என்ன எனவும் கேள்வியெழுப்பினார்.
பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் பெகாசஸ் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com