மீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்

மீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்
மீனவர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய ரூ.70 லட்சம் மதிப்புள்ள படகு - சக மீனவர்களால் தப்பித்த 8 மீனவர்கள்

புதுச்சேரியில் மீன்பிடி படகில் ஏற்பட்ட பழுதால், மீனவர்கள் கண்முன்னேயே படகு மூழ்கியது

புதுச்சேரியை அடுத்துள்ள வீராம்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான படகில், கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், ‌வியாழக்கிழமை இரவு கால‌ப்பேட்டையை ஒட்டிய ‌சின்ன முதலியார் சாவடி என்ற இடத்தில் படகை நிறுத்திவிட்டு உறங்கினர். 

அதிகாலை 4 மணி அளவில் வலை வீச தாயரானபோது, படகின் எஞ்சின் பகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் மெல்ல உள்ளே வரத்தொடங்கியது. இதனை கண்டு அதிர்ந்த அவர்கள் கடலோர காவல்படையின் உதவியை கோரியபோது மீட்புப்படகு பழுதாகி விட்டதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சக மீனவர்களை தொலைபேசி மூலம் உதவிக்கு அழைத்ததை தொடர்ந்து அவர்கள் வந்து 8 மீனவர்களையும் மீட்டனர். அடுத்த சிலநிமிடங்களில் விசைப்படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. கண் முன்னே படகு கவிழ்ந்த காட்சி மீனவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. கடலில் மூழ்கிய படகின் மதிப்பு 70 லட்சம் ரூபாய் மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com