மம்தா பானர்ஜிக்கு எதிராக தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

மம்தா பானர்ஜிக்கு எதிராக தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

மம்தா பானர்ஜிக்கு எதிராக தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
Published on

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து சென்னையில் எல்.முருகன் தலைமையிலான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறைகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்கள் தொண்டர்கள் 6 பேர் இந்த வன்முறையில் பலியானதாக பாஜகவும்,  தங்கள் கட்சித் தொண்டர்கள் 5 பேர் பலியானதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளன.  சில இடங்களில் பாஜக அலுவலகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. தங்கள் தொண்டர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் மாநில காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து சென்னையில் எல்.முருகன் தலைமையிலான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் வன்முறையை கண்டித்து உரையாற்றினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com